யாழ்ப்பாணம் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
உத்தியோகபூர்வ முடிவுகள் சில மணி நேரங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மினுவாங்கொட பகுதியில் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி கோரோனா வைரஸ் தொற்று கொத்தணி கண்டறியப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் 11ஆவது நபர் இவராவார். Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், நல்லூர்